Thursday, July 14, 2011

குறுந்தொகை
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
                                  - செம்புலப்பெயனீரார்


இருவர்
யாயும் ஞாயும் யாராகியரோ நென்று நேர்ந்ததென்ன 
யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்
அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன
                                                  - வைரமுத்து

1 comment:

  1. Some of my favorite lines ever! That whole song is very good.

    Btw, these lines are used in a Jillinu Oru Kaathal song.

    ReplyDelete